சிரிய விவகாரம் குறித்து ஒபாமா, புடின் தொலைபேசியில் உரையாடல் !

obama buttin

 

சிரிய விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் வெளிப்படையாக பேசி ஆலோசனை நடத்தினர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சீரழிந்துள்ள சிரிய நாட்டின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக ரஷ்ய அதிபர் புடினுக்கு ஒபாமா போன் செய்து உரையாடினார். 

அப்போது ரஷ்ய போர் விமானங்கள் தன்னுடைய வான்வெளி தாக்குதல் நிறுத்த வேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார். 

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் முகாம்கள் மீது துருக்கி குண்டு மழை பொழிவது குறித்து அதிபர் ஒபாமா கவலை தெரிவித்தார். 
    
சிரியாவில் எதிர் தரப்பு படைகளுக்கு எதிராக வான்வெளி தாக்குதல் நடத்துவதன் மூலம் ரஷ்யா ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் அவர் சுட்டிக் காட்டினார். 

இருநாட்டு தலைவர்களும் சர்வதேச சிரிய ஆதரவு குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்தும், போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஆலோசனை செய்தனர். 

நுண்ணுயிரிகளின் வல்லுனர் குழு தொடர்பான பணிகளில் இருநாடுகளில் தொடர்பில் இருக்கும் என்று இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.