இன்று முதல் சீகா வைரஸ் தொடர்பான இரத்த மாதிரி பரிசோதனை ஆரம்பம் !

சீகா வைரஸ் தொடர்பான இரத்த மாதிரிகள் பரிசோதனைகள் இன்று முதல் பொரலை வைத்திய ஆராய்ச்சி மையத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-zika-virus

அத்துடன் இந்த பரிசோதனைகளுக்கான இரசாயன திரவியங்கள் மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

மேலும் ஸீகா வைரஸ் தொற்று பரவியுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றாலாப் பயணிகள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நேற்றைய தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.