குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிப்பு !

Untitled5

 

முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

வீசா காலாவதியாகி நாட்டில் தங்கியிருந்ததாக குமார் குணரட்னத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் குமார் குணரட்னத்தை விளக்க மறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி கேகாலை அங்குருவெல்ல என்னும் இடத்தில் வைத்து காவல்துறையினர் குணரட்னத்தை கைது செய்திருந்தனர்

அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் வீசா காலம் பூர்த்தியாகியும் நாட்டில் தங்கியிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.