சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு !

images

ஜனநாயக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்த வைபவம் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நடைபெறுகின்றது.

இதன்போது சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. 

ஜனநாயகக் கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் இதில் கைச்சாத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.