படைவீரர் நலன்புரி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் ?

 

Sarath-Fonseka3

படைவீரர்களின் நலன்புரி விவகார அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என ஆளும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா பதவிப் பிரமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் அமரர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகா நியமிக்கப்பட உள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

நாடாளுமன்றில் சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரில் உள்ள ஆசனமொன்றில் அமரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை அந்தஸ்துடைய படைவீரர் நலன்புரி விவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.