20 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகத் தீர்மானம் !

slfp1

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
புதிய அரசியல் கட்சியொன்றில் இணைந்து கொள்ள இந்த உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.

வெகு விரைவில் இந்த புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய அரசியல் கட்சியில் 20 ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்ள உள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியே புதிய அரசியல் கட்சி அமைக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்களை மட்டும் இலக்கு வைக்காது, நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.