ஜனாதிபதியின் மகனால் விலையுயர்ந்த புதிய பீ.எம்.டபிள்யூ ஐ8 கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது !

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் அதிசொகுசு காரொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 148,250 அமெரிக்க டொலர் பெறுமதியான பீ.எம்.டபிள்யூ ஐ8 ரக காரொன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த காரின் விலை இலங்கை பெறுமதியில் 21,496,250.00 என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களான நாமலுக்கு லேம்போகினி, இரண்டாவது புதல்வருக்கு ஹெலிகொப்டர், இளைய மகனுக்கு தங்க குதிரை என வர்ணித்தவரே மைத்திரியாவார். 

இவ்வாறான நான்கு கார்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெற்றிக் கொண்டு நாட்டை காப்பாற்றுவோம் என கூறியே மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீ்டத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Daham-Sirisena-