தாருஸ்ஸலாமில் இருவாரங்களுக்கு ஒரு முறை மார்க்க சொற்பொழிவு !

 

அஸ்ஸலாமு அலைக்கும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது  தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். இச்சொற்பொழிவுத் தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் அஹ்லாக், தப்ஸீர், ஸீரா, தாரீஹ் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனவரி 28  மாலை 6.45 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், அஷ்ஷெய்க் டி. எம். முபாரிஸ் ரஸாதி அவர்களினால் அல்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாறு என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

மக்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் தங்களை சமூகம் தருமாறு அன்புடன் அழைப்பதோடு, இது பற்றி உங்களது நண்பர்களுக்கும் அறியத் தருமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

நிருவாக செயலாளர்