அன்ஜலோ மெதியுசுக்கு ஆதரவாக அர்ஜுன ரணதுங்க !

ளையாட்டுத்துறையை இல்லாது செய்வதற்காக விளையாட்டுத்தறை அமைச்சரும் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகமும் இணைந்து செயற்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரிக்கெட் நிருவாகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என யாழ் மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தீவ்ஸிடம் பாரிய நிதி மோசடிப் பிரிவு விசாரணை செய்வது குறித்தும் அவர் இதன் போது தெரிவித்தார். 

அன்ஜலோ மெத்தீவ்ஸிடம் விசாரணை செவ்தாக இருந்தால் அவருடை வீட்டுக்கு சென்று விசாரணை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

குசல்ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரை பணத்திற்காக போட்டி நிர்ணயத்தில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அன்ஜலோ மத்தீவ்ஸை பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைககப்பட்டிருந்தார்.