வெடிகுண்டு மிரட்டல் : துருக்கி விமானம் அயர்லாந்தில் அவசரமாக தரையிறக்கம் !

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்-க்கு வந்துக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகொண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவசரமாக அயர்லாந்து நாட்டில் விமானம் தரையிறக்கப்பட்டது.

turkish-airlines
மொத்தம் 207 பயணிகளுடன் பறந்துக்கொண்டிருந்த அந்த துருக்கி போயிங் விமனத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தியை அடுத்து அயர்லாந்தின் லிமரிக் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது விமானத்தில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்படுள்ளதா? என்பதை கண்டறிய அயர்லாந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.