மஹிந்த ராஜபக்சே விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் வரை குற்றவாளியாக கருதப்படமாட்டார் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் அவர் குற்றவாளியாகவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
vijayathasa

கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலி புதிய நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் வரை அவர் குற்றவாளியாக கருதப்படமாட்டார் என தெரிவித்த அமைச்சர், பொலிஸ் நிதி மோசடி ஒழிப்பு பிரிவின் அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் எவராலும் செல்வாக்குச் செலுத்த முடியாது என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டில் சுயாதீன நீதித்துறை காணப்படுவதனால் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.