ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படை தளமாக பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது: பிரதமர்

ranil-wickremasinghe1
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படை தளமாக பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தொலைக்காட்சி ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார் 

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்டமையானது இந்தியாவுக்கு தெரிந்தவிடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார் 

எனினும், சீன கடற்படை கப்பல்களின் தளமாக அது பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், இந்தியா உட்பட்ட ஏனைய பல நாடுகளும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்