குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி அக்கட்சியினர் கொழும்பு கோட்டையில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டனர்.

கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முயன்றதும் குறிப்பிடத்தக்கது.