சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை !

சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியாவின் அதிருப்தியின் மத்தியில் இந்தக்கப்பல்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளன.
images

குறித்த மூன்று கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்துள்ள இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் வியாழக்கிழமை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும். 

இந்திய அரசாங்கத்தின் அதிருப்தியை அடுத்து இலங்கையின் புதிய அரசாங்கம் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் வருவதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.