இலங்கையின் அபிவிருத்தி குறித்து சர்வதேச நாடுகளின் மத்தியில் போட்டி தன்மை நிலவுகின்றது : ஜனாதிபதி

இலங்கையின் அபிவிருத்தி குறித்து சர்வதேச நாடுகளின் மத்தியில் போட்டி தன்மை நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Maithripala-Sirisena1

பொலன்னறுவையில், சுற்றுவட்ட பாதையின் நிர்மான பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு கொள்கையுமே இதற்கு காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு சிறந்த எடுத்து காட்டாகவே 43 ஆண்டுகளின பின்னர் ஜேர்மனி அரசாங்கத்தினால் அந்த நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று சர்வதேசத்தின் ஆசீர்வாதம் நாட்டிற்கு கடைத்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களை கருத்திற்கொள்ளாது, மக்களுக்காகவும் பொறுப்பேற்ற பணிகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.