சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளையும் அரசியலமைப்பு திருத்ததிற்கு உள்வாங்கிக் கொள்ளப்படும் : பிரதமர்

 

Ranil-18

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

அலரி மாளிகையிலிருந்து இன்று முற்பகல் விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தத்தின் போது அனைத்து கட்சிகளுக்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தப்பம் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளையும் அரசியலமைப்பு திருத்ததிற்கு உள்வாங்கிக் கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.