ACMC பேராளர் மாநாட்டை கண்டித்து ஏறாவூர் பிரதான வீதியெங்கும் கருப்புக்கொடி!

 

றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான், எம்.வை. அமீர்

குருநாகலில் இன்று (17) நடைபெறுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணம் ஏறாவூர் பிரதான வீதியெங்கும் கறுப்புக் கொடிகளாக காட்சி தருகிறது.  அதுபோல் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.

கட்சியின் மூத்த போராளிகள், செயலாளர் நாயகம், உயர்பீட உறுப்பினர்களுக்கு தெரியாமல், அறிவிக்கப்படாமல் கட்சியின் யாப்பின் சரத்துக்கு மாற்றமாக சட்டவிரோதமாக இந்த பேராளர் மாநாடு நடைபெறுவதாக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

jhn_Fotor lkmj_Fotor