அமைச்சர் ராஜித பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம் !

சுலைமான் றாபி
பொத்துவில் வைத்தியசாலைக்கு சிறுநீர் சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு என்பன அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சுகாதார பிரதியமைச்சருமான பைசால் காசிம்  தெரிவித்தார். 
rajitha faizal
பிரதியமைச்சரின் அழைப்பின் பேரில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்றைய தினம் (16) பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது இந்த அவசர சிகிச்சைப் பிரிவுகளை உடனடியாக அமைப்பதற்கு அமைச்சர் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அண்மைக் காலங்களில்  இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திற்கு தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமெனவும் பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் பிரதியமைச்சரினால் முன்னெடுக்கப்படும் வைத்தியசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டதோடு, இங்கு  சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளையும் பார்வையிட்டதும்  குறிப்பிடத்தக்கதாகும். 
rajitha faizal
DSC07264_Fotor
DSC07289_Fotor