இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை !

 

Unknown

நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்தப் பேச்சவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஜப்பான் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். பிராந்திய பிரச்சினைகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடற்பாதுகாப்பு, முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு போன்ற ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.