இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை!

 
Unknown
     

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூமை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.