இரு அமைச்சர்கள் மாலைதீவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

 

 

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மாலைதீவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

Unknown

அந்த நாட்டின் இப்ராஹீம் நாஸிர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை, அந்நாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் பாத்திமத் இனாயா மற்றும் அமைச்சின் செயலாளர் ஹுஸைன் நியாஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர். 

அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் துன்யா மஃமூனின் அழைப்பின் பேரில் இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். 

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காகவே இவர்கள் அங்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.