பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் 14ம் திகதி இலங்கை வருகிறார் !

பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைர் எதிர்வரும் 14ம் திகதி இலங்கை வரவுள்ளார்.

இவரின் விஜயம் குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த போதும் அதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை.

Hugo_Swire_visits_Japan

இந்தநிலையில் இன்று அமைச்சர் எரான் விக்கிரமரட்ன,  ஹூகோவின் விஜயம் செய்யும் திகதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி 14ம் திகதி இலங்கை வரும் ஹூகோ பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்

அத்துடன் இலங்கையின் அரசாங்கத்தின் தேசிய தைப்பொங்கல் நிகழ்விலும் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.