மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது : ராஜபக்ஸ !

mahinda and gotabaya

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நன்மையை செய்யவில்லை எனவும், காவல்துறை ராச்சியமொன்றையே உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசியல் கட்சியொன்று அவசியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் குற்றச் செயல்களை கண்டு பிடிப்பதனை விடவும் பழிவாங்கல்களில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.