எகிப்தில் சுற்றுலாப்பயணிகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !

egypt hoel_CI

எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள்  நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள அதேவேளை பின்னர் இவர்களை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கத்தியுடன் ஹோட்டலிற்குள் நுழைந்த நபர்கள் அவுஸ்திரியா மற்றும் சுவீடனை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை கத்தியால் குத்தியுள்ளனர்.அவர்கள் சுற்றுலாப்பயணிகளை கடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் எஞ்சியிருக்க கூடிய தீவிரவாதிகளை தேடி எகிப்பதிய படையினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.