ஹிருணிகா பிரேமச்சந்திர கைது !

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்தார். 

hirunica-1

கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர  தெரிவித்திருந்தார்.