21 இலங்கையர்களை கைது செய்ய 180 நாடுகளிடம் ஒத்துழைப்பு கோரும் இன்டர்போல் !

நிதி மோசடியில் ஈடுபட்ட 21 இலங்கையர்களுக்கு இன்டர்போல் என்படும் சர்வதேச பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
INTERPOL_logo_hi-res_2012_4

நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குறித்த இலங்கையர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு இன்டர்போல் 180 நாடுகளிடம் கோரியுள்ளது. 

இவ்வாறு தேடப்பட்டு வருவோர் பட்டியலில் ஆறு பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

இந்த 21 பேரும் நாட்டை விட்டு தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். 

சில நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் மூவர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.