தாஜூதீனின் மரணம் தொடர்பில்; கைது செய்வதற்கு சிறிய இடைவெளியே உள்ளது : ராஜித

waseem-thajudeen-640x400
தாஜூதீனின் மரணம் தொடர்பில் தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் எதனையும் மறைக்க தயார் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். 

ஒன்றும் மறைக்கப்படமாட்டாது, வழக்குக்கு வழக்கு முடிவுகள் வெளியாகின்றன. 

கைது செய்வதற்கு இன்றும் சிறிய இடைவெளியே உள்ளன. 

இந்த கைதுகளை தடுப்பதற்காகவே நாட்டில் பாரிய குழப்பநிலையை தோற்றுவித்து, நாட்டில் ஸ்திரத்தன்மையை இல்லாது செய்யவே தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.