தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையின் தமிழ் அகதிகளுக்கு தமிழக முதல்வரினால் அன்பளிப்புகள் !

ARV_JAYALALITHAA__7119f
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரத்தில் முகாம்களில் வாழும் இலங்கையின் தமிழ் அகதிகளுக்கு பொங்கல் அன்பளிப்புகள் வழங்கப்படவுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இதனை அறிவித்துள்ளார். 

இந்த தைப்பொங்கல் அன்பளிப்புக்கள் ரேசன் அட்டை மற்றும் பொலிஸ் அட்டை வைத்திருப்போருக்கும் வழங்கப்படும் என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது. 

இந்த அன்பளிப்புகளில் ஒரு கிலோ அரிசி, சீனா, இரண்டு அடி கரும்பு என்பவற்றுடன் 100 ரூபாவும் உள்ளடக்கப்படவுள்ளது. 

இந்த அன்பளிப்புகள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகிக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.