சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடல் !

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த கலந்துரையாடலில் அத்துரெலிய ரத்தன தேரர், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பிரணாந்துபிள்ளே, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தனர். 

சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.