இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இலங்கையை வந்தடைந்தார் !

FILE IMAGE
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளயர் நேற்று   மாலை இலங்கையை வந்தடைந்தார்.

விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள பொருளதார அமர்வில் பங்கேற்பதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.

குறித்த அமர்வுகள் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை டோனி பிளோயர் சில மாதங்களுக்கு முன்னர் தமது குடும்பத்துடன் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

FILE IMAGE
                                                                                               FILE IMAGE