ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இலங்கை முதன்மை : ஜனாதிபதி

 
President , maithri
2015ம் ஆண்டில் சுதந்திரத்தை பாதுகாத்தல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இலங்கை முதன்மை பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இதனை சர்வதேச மாநாடு ஒன்றின் போது உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பொலநறுவையில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

நாம் கடந்த பாதையை திரும்பிப் பார்க்கின்ற போது கடந்த வருடம் பல விடயங்களில் சாதித்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.