29 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை – நாயாறு பகுதியிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அளவி லங்காசிறி செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார். 

குறித்த மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

கரையோர பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.