வரவு செலவுத்திட்டத்தின் உண்மை நிலைமை எதிர்வரும் மூன்று மாதங்களில் அம்பலமாகும்: உதய கம்மன்பில

Unknown
வரவு செலவுத்திட்டத்தின் உண்மை நிலைமை எதிர்வரும் மூன்று மாதங்களில் அம்பலமாகும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை செய்ததன் மூலம் அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதாரக் கொள்கை முழு உலகிற்கும் வெளிச்சமாகியுள்ளது. 

எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பற்றி மக்கள் அறிந்துகொள்வார்கள். 

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் திருத்தங்கள் செய்ய முடியும் என அரசாங்கம் தனது பிழைகளை மூடி மறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. 

கடந்த அரசாங்கம் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டதாகவும் வரவு செலவுத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 

உண்மையில் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் குறைபாடுகளை மூடி மறைக்கவே இவ்வாறு அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின்  மீது குற்றம் சுமத்தி வருவதாக உதய கம்மன்பில வார இறுதி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.