றிஷாட் பதியுதீனுடன் விவாதம் புரிய முன்வந்துள்ள இந்த ஆனந்த சாஹர தேரர் யார்?

அஷ்ரப் ஏ சமத்  

நாளை மறுதினம் திங்கள்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனுடன் விவாதம் புரிய முன்வந்துள்ள இந்த பாஹியங்கள ஆனந்த சாஹர தேரர் யார்?
IMG_7289 (2)
1990 ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் யுத்தம் முடிந்து சமாதான சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் சிலாவத்துறை, கரடிக்குழி, பாலைக்குழி, கொண்டச்சி முசலி போன்ற பூர்வீக பிரதேசங்களில் குடியேற சென்றபோது, அவர்கள் வில்பத்துகாட்டை அழிப்பதாக இனவாதப்பிரசாரங்களை மேற்கொண்டவர்.
அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் ஆயிரக்கணக்கான இனவாதிகளுடன் அகதி முஸ்லிம்கள் கொட்டில்கள் அமைத்து குடியமரதிருந்த பூர்வீகப் பிரதேசங்களுக்குச்சென்று காட்டுத்தருபாரில் ஈடுப்பட்டவர்.அந்தப்பிரதேசங்களில் நின்று கொண்டு இனவாத ஊடகங்களைப்பயன்படுத்தி.
முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தினை கிளப்பியவர்,முஸ்லிம்கள் மீள்குடியேறிய அவர்களது காணிகளில் நின்றுகொண்டு அரச மரங்களை நாட்டியவர் இந்த நாட்டில் வாழும் 74%மான சிங்களவர்களை 10%சிறுபான்மை முஸ்லிம்களுடன் மோத விட்டு மற்றுமொரு இனக்கலவரத்தை தூண்ட அவர் பகீரதப் பிரயத்தனம் செய்தவர்தான் இந்த ஆனந்த சாஹர தேரர். முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வை அவர் இவற்றுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை.
வில்பத்து காட்டில் முஸ்லிம்கள் காடழித்து குடியேறுவதாக போலி அறிக்கைகளைத்தயாரித்து,அந்த அறிக்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் இனவாதத்சூழலியாளர்களின் விஷக்கருத்துக்களயும் உள்வாங்கி 57 பக்க அறிக்கை ஒன்றைத்தயாரித்து ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனவிடம் கையளித்தவர் 

இந்த ஆனந்த சாஹர தேரர்தான்.

அவர் மேற்கொண்ட எந்த நடவடுக்கையும் வெற்றியளிக்காதநிலையில் போலி முக நூல்களைப்பயன்படுத்தி அப்பாவி மாணவர்களை அதில் ஈடுபாடு காட்டவைத்து அமைச்சர் றிஷாட் மீதும் அகதி முஸ்லிம்களின் மீதும் அபாண்டங்களைப்பரப்பியவர்.தேசிய சங்க சபாவ செயளாலரான சாஹர ஆனந்த தேரர் இனவாதிகளையும்,இன வாத சூழலியலாளர்களையும் விகாரமகாதேவி பூங்காவுக்கு முன்னால் ஒன்று திரட்டி தனது இன வாத்த்தை கக்கியவர் விகாரமகாதேவி பூங்காவில் இருந்து தாமரைத்தடாகம் வரை இனவாத கோசங்களை எழுப்பி ஊர்வலம் சென்று கொண்டிருந்த பேரணிக்கு தலைமை தாங்கிய ஆனந்த சாஹர தேரர் ஊடகங்களுக்கு மோசமான மூன்று கருத்துகளை வெளியிட்டார்.
1. வில்பத்து தேசிய சரணாலைய காட்டை அழித்து  றிஷாட் பதியுதீன் அகதி முஸ்லிம்களை குடியமர்துகின்றார்.
2.வில்பத்து காட்டைப்பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவரது அடிவருடிகளும் போதைப்பொருள் கடத்துகின்றனர்.
3.அமைச்சர் றிஷாட் பதியுதீனின் செயற்பாடுகள்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.

என்று கூறி கேவலமான இழி சொற்களைப்பயன்படுத்தி அமைச்சர் றிஷாடை தூசித்தார். 

வடக்கு முஸ்லிம்களின் பல்கழை மாணவர் ஒன்றியம்.