அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டுநிறைவு விழாவும் கௌரவிப்பும் !

எம்.வை.அமீர் 

adcaja meera

அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர், கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் கலந்து ஊடகவியாலாளர்களுக்கு கௌரவமளித்தார். கிழக்குமாகாண முதலமைச்சர் இசட்.ஏ.ஹாபீஸ் நஸீர் அஹமட் கௌரவ அதிதியாகவும், சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.எம்.பைசால் காசீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.றஸ்ஸாக், ஏ.எல்.தவம் மற்றும் ஆரீப் சம்சுடீன் ஆகியோர் அதிதிகளாகவும் ஊடகத்துறை சார்ந்த அதிதிகளாக தினகரன் பத்திரிக்கையின், பிரதம ஆசிரியர் கே.குணராசா மற்றும் ரூபவாகினி தொலைக்காட்சியின் பிரதிப்பணிப்பாளர் யூ.எல்.யாக்கூப் போன்றோரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் கல்வியாளர்கள் என அதிகமானோர் பங்கு கொண்டிருந்தனர்.

இதில் ஏ.எல்.ஜுனைடீன் ,யூ.எம்.இஸ்ஹாக், ரீ.கே.றஹ்மத்துள்ளா, பீ.எம்.எம்.ஏ.காதர், எம்.ஏ.றமீஸ், எம்.எல்.சரீப்டீன்,ஐ.எல்.எம்.றிஸான், எம்.ஐ.எம்.வலீத், எஸ்.எம்.அறுஸ்,ஏ.புஹாது, ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஜெஸ்மி எம். மூஸா, எஸ்.எல்.அஸீஸ், எம்.சீ.அன்சார், நளீம் எம். பதுர்டீன், எஸ்.நடனசபேசன், ஏ.கே.ஜாஹ்பர், எம்.ஐ.அன்வர், எம்.ஐ.எம்.றியாஸ்,ஆர்.தில்லைநாயகம்,ஏ.எல்.றமீஸ், எம்.பீ.அஹமட் ஹாருன், ஏ.ஜே.எம்.ஹனீபா, ஜலீல் ஜீ ஆகிய 24 ஊடகவியாலாளர்கள் கெளரவங்களை பெற்றுக்கொண்டனர்.

adcaja meera

adcaja meera

adcaja meera

adcaja meera

adcaja meera

adcaja meera