செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பத்தில் பூமியில் உருளைக் கிழங்கு செய்கை!

 

Potato-reasearch

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே அங்கு மக்களை குடியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் பயிரிடுவது குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டு விட்டன. முதலாவதாக செவ்வாய் கிரக தட்ப வெப்ப நிலையில் பூமியில் உருளைக்கிழங்கு பயிரிட்டு சோதனை நடத்தப்படுகிறது.

அதற்காக ஒரு மிகப்பெரிய ஆய்வுநிலையம் அமைக்கப்பட்டு அதில் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்று மண்ணின் தன்மை மாற்றப்பட்டுள்ளது.

இந்த உருளைக் கிழங்கு செய்கை தொடர்பான பரிசோதனையை சர்வதேச உருளைக்கிழங்கு மையம் பெருநாட்டிலும், அமெரிக்காவின் நாசா மையத்திலும் நடத்துகிறது.