அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவையொட்டி பொதுமக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு !

Ranil
அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவையொட்டி இக்காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கு நன்மை தரும் விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்தின் ஒரு வருடப் பூர்த்தி, பொதுமக்கள் சேவையில் மகத்தான முன்னேற்றம் என்ற தலைப்பில் இந்த தெளிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மட்டுமன்றி, செய்தி இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாகவும் குறித்த பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் பொதுமக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பால் ஈர்த்தெடுப்பதற்கு ஏதுவான வகையில் குறித்த பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.