38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் அன்று முழு நிலவு!

images
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. 

நடப்பாண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது  `முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படுகிறது. 

இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.