தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம் ….!

 தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை முற்றுகையிட்டுள்ளனர். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நுழைவாயிலை மூடியுள்ளதாகவும், நுழைவாயிலில் பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து எவரையும் வெளியேற முடியாத வகையில், பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறைகள், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகியிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குப்பற்றியுள்ளனர்.