ஆப்கானில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் : 6 அமெரிக்க வீரர்கள் பலி !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 
694940094001_4670116299001_0f52b407-9ca7-4264-8914-dbe4cab5aec7
அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத்தளம் ஆப்கானிஸ்தானின் பக்ரம் நகரில் அமைந்துள்ளது. இந்த நகரின் அருகே நேற்று ஆப்கன் படையினரோடு இணைந்து சர்வதேச நேட்டோ படையினர் ரோந்துப்பனியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் வந்த தலிபான் தீவிரவாதி ஒருவன் படையினர் மீது தாக்குதல் நடத்தினான். 

இந்த தாக்குதலில் 6 சேவை உறுப்பினர்கள்(NATO) பலியானதாகவும் 3 பேர் காயமடைந்திருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பக்ரம் நகரில் வெளிநாட்டு படையினர் மீது இந்த ஆண்டு நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.