வாஸிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளது !

waseem-thajudeen-640x400
முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க தனியார்துறை கையடக்க தொலைபேசி வழங்குநரான டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை என்ற அடிப்படையில் தாஜூடீனின் மரண விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மரணத்துக்கு முன்னர் தாஜூடீனுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்கள் குறித்து தரவுகளை திரட்டுமாறு கோரப்பட்டிருந்தது. 

இதன்படி டயலொக் டெலிகொம்மிடம் தாஜூடீனின் கைத்தொலைபேசிக்கான உள்வருகை அழைப்புக்கள் தொடர்பில் தகவல் கோரப்பட்டது .

இதன்போது அவ்வாறு உள்வருகை அழைப்புக்கள் தொடர்பிலான தரவுகளை பராமரிப்பதில்லை என்று குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.

எனினும் தற்போது அந்த தகவல்களை தருவதற்கு டயலொக் நிறுவனம் முன்வந்துள்ளது.