பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா

Sarath-Fonseka

இராணுவ அதிகாரியொருவருக்கு உலக தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் முப்படை பிரதானிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்டார். உலகில் இராணுவ அதிகாரி ஒருவரின் மிக உயர்ந்த பதவியாக ஃபீல்ட் மார்ஷல் காணப்படுகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட சில நாடுகளில் மாத்திரமே இந்த பதவி காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது இலங்கையர் சரத்பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.