தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்சில் பள்ளிகள் மூடல்!

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளிகள் அனைத்தும் தீவிரவாதிகளின் மிரட்டலை அடுத்து மூடப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3673e418-e5da-4f71-a3b7-0c11e553792d_S_secvpf

சற்று முன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பல பள்ளிகளுக்கு தீவிரவாதிகள் மின்னணு அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து பள்ளி பேருந்துகளும் பள்ளிகளுக்கு உடனே திரும்பி வரவேண்டும் என்றும், பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அண்மையில் சான் பெர்னார்டினோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.