உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த தரப்பினர் தனித்து போட்டியிட தயார் !

Mahinda-Lion-
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு ஆதரவான தரப்பினர் தனித்து போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்த போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களை உள்ளடக்கி நாடு முழுவதிலும் தேர்தல் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலை எதிர்நோக்க சகல ஆயத்தகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.