உம்மா நான் உம்றாக்கு போறன்!!!

 

உம்மா நான் உம்றாக்கு போறன்!!!

 

  உம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து
ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன்.

சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு

ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தார் மதிக்கார்.

சாச்சி பெரியம்மா பசியால்-ஊரில்

சாகக் கிடந்தாலும் நான் உதவ மாட்டேன். 

ஈச்சம் பழம் கொண்டு வருவேன்-அதன்

இடையில தங்கம் பிஸ்கட்டா இருக்கும்.

பருப்போடு பாண் தின்னும் போதும்-பின்னர்

பள்ளியில் பக்தியாய் தவாப் செய்யும் போதும்

குறூப்போடு செல்பிகள் எடுப்பேன்-fbயில்

குறிப்போடு போட்டு குஷியாக இருப்பேன்.

விமானத்தில் தருகின்ற பெட்சீட்-அதை

விளங்காமல் சுருட்டி

வைப்பேனே பேக்கில்

அமானத்தை நான் பேண மாட்டேன்-ஆனாலும்

அடுக்காக உம்றாக்குப் போவேன்

செக்குக்கு டேட் போட்டு கொடுப்பேன்-பின்

செரியான டேட்டுக்கு பணம் போட முன்னால்

மக்காக்கு டக்கென்று போவேன்-அந்த

மக்கிங்கு செக்கோடு சிக்கலில் தவிப்பான்.

உம்றாக்கு போகின்ற பலபேர்

உண்மையில் நல்லோர்கள்

உயர்ந்திட்டார் அமலில்.

சும்மாவும் போகின்றார் சிலபேர்-இங்கு

சொன்னது அந்த சிலபேர்க்கு மட்டும்.

(காத்தான்குடி நிஷவ்ஸ் -14/12/2015)