ரோம் நகரைச் சென்றடைந்தார் ஜனதிபதி !

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி நேற்றிரவு பியூயும்சினோ விமான நிலையத்தை சென்றடைந்தாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட பிரதிநிதிகளை வத்திக்கான் பிரதான அதிகாரி ஜோஸ் பேடர்ன்கோட், இத்தாலிக்கான இலங்கையின் தூதுவர் தயா பெல்பொல, வத்திக்கானுக்கான தூதுவர் ரவிநாத் ஆரிசிங்க ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதியை வரவேற்க இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். 

ஜனாதிபதியுடன் அமைச்சர் ஜோன் அமரதுங்க, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் ரோசி சேனாநாயக்க ஆகியோர் ரோம் சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.