மஹியங்கனை – கிராதுருகோட்டையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி !

மஹியங்கனை – கிராதுருகோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

கிராதுருகோட்டையில் இருந்து மஹியங்கனை வரை பயணித்த கெப் வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் இருவர் பலியாகியுள்ளனர். 

இவர்கள் கிராதுருகோட்டை – பஹலரத்கிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதான இருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.