றபிஉல் அவ்வல் தலைப்பிறை தென்பட்டுள்ளது!!

ஏ.எஸ்.எம்.ஜாவித்

ஹிஜ்ரி 1437 றபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளி வாசலின் பிரதான மண்டபத்தில் இன்று (12) மஃரிபு தொழுகையின் பின்னர் பிறைக் குழுத் தலைவர் மௌலவி றியாழ் தலைமையில் இடம் பெற்றது.

Unknown

 

மேற்படி மாநாட்டில் அகில இலங்கை ஜமியதல் உலமா சபையின் பிரதி நிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள் பிரதிநிதிகள், நாடளாவிய ரீதியில் உள்ள பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்கள் போன்ற வற்றின் பிரதிநிதிகள், மௌலவிமார்கள், மார்க்க அறிஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதன்போது நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டாலும் காலி மற்றும் வெளிகம பகுதிகளில் கால நிலை சாதகமாக இருந்ததால் பிறை தென்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உலமாக்களால் பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்றிரவிலிருந்து றபிஉல் அவ்வல் ஆரப்பிப்பதாக பிறைக் குழுத்ததலைவர் உத்தியோ பூர்வமாக அறிவித்தார்.