14,000 கிலோகிராம் கழிவு தேயிலைகள் மீட்பு !

பத்தேகம, எத்கந்துர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கழிவு தேயிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

காலி முகாமின் பொலிஸ் விசேட படைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சுமார் 14,000 கிலோகிராம் கழிவு தேயிலைகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ன. 

சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட படைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பத்தேகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.