பாராளுமன்றில் அமளிதுமளி; முஜிபுர் ரஹ்மான் மீது தாக்குதல் முயற்சி !

பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையே சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

வஸீம் தாஜுதீன் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அது நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயம் எனத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.